தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?.., அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?.., அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? – தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக இன்று (ஏப்ரல் 17) முதல் ஏப்ரல் 19 வரை டாஸ்மாக் கடை, பார்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு எண்ணிக்கை வெளியிடும் தேதியான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மது பிரியர்களுக்கு மேற்கொண்டு ஒரு அதிர்ச்சியான செய்தியை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?

அதாவது வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அந்த இரண்டு தினங்களிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், கிளப்பு பார்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதனால் மதுபிரியர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். 

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *