ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்

ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்ட உள்ளனர். எனவே காலியாக இருக்கும் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.  

ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்

ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்

அமைப்பின் பெயர் :

   திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP GROUPCLICK HERE

காலிப்பணியிடங்களின் பெயர் :

   வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று அமைப்பின் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   ஒரு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :  

   அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

   வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதுத்தகுதி குறிப்பிடப்பட வில்லை.

சம்பளம் :

   ரூ.55,000 வரையில் மாத ஊதியமாக வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு :

   1. தகவல்களை பகுப்பாய்வு செய்வதிலும் அதனை விளக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

   2. நிர்வாகத்திறன் பெற்று இருக்க வேண்டும்.

   3. தமிழ் , ஆங்கிலம் தொடர்பு கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

   4. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமை :

    கல்லூரியில் ஊரக வளர்ச்சி முகமை சார்ந்த முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   வருகின்ற 13.10.2023ம் தேதிக்குள் காலியாக இருக்கும் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

விண்ணப்பிக்கும் முறை :

   இணையதளத்தின் மூலம் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD
OFFICIAL APPLICATIONAPPLY NOW 

விண்ணப்பக்கட்டணம் :

   அலுவலர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

   திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலியாக இருக்கும் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுவர். 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :

   1. மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பிப்பதற்கான லிங்க்யை கிளிக் செய்யவும்.

   2. அதில் கேட்கப்பட்டு உள்ள பெயர் , கணவர் / தந்தை பெயர் , பிறந்த தேதி , வயது , மின்னஞ்சல் முகவரி , பாலினம் , ஆதார் எண் , மொபைல் எண் , முகவரி போன்றவைகளை சரியாக நிரப்பிய பின் Save , Next கொடுக்க வேண்டும்.

   3. விண்ணப்பதாரர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

   4. பின்னர் தெரிந்த மொழிகளை தேர்வு செய்ய வேண்டும். 

   5. கல்வி தகுதிகளை நிரப்ப வேண்டும்.

   6. 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு , கல்லூரி மற்றும் அனுபவ சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

   7. கீழே காண்பிக்கும் கடவுச்சொல்லை பதிவு செய்து நாம் பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதை சரி பார்த்த பின்னர் Save , Submit கொடுக்க வேண்டும்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *