திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு - DNA பரிசோதனை - சிக்கிய அடுத்த துப்பு!திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு - DNA பரிசோதனை - சிக்கிய அடுத்த துப்பு!

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு: திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று அவரின் வாயில் பாத்திரம் துலக்கும் கம்பி சிக்கி இருப்பதை பார்த்த காவல்துறை ஜெயக்குமார் வீட்டில் சோதனை போட்ட போது,  அங்கு அந்த பாத்திரம் துலக்கும் கம்பியுடைய பாக்கெட் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையில் முழுவீச்சாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் மீட்கபட்டதை தொடர்ந்து அவருடைய எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அவருடைய எலும்புகளை மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த வழக்கில் சில துப்புகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மே 4ஆம் தேதி நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *