தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து கொண்டு வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் கிழடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுசேரி உள்ளிட்ட பகுதிகளால் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். மேலும் இன்று திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *