பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன் - டெல்லியை கதறவிட்ட இளைஞன் - வெளியான அதிர்ச்சி காரணம்?பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன் - டெல்லியை கதறவிட்ட இளைஞன் - வெளியான அதிர்ச்சி காரணம்?

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன்: டெல்லியின் முக்கிய பகுதியான துவாரகா பகுதியில் இருக்கும் பப்ளிக் பள்ளி, மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த மூன்று பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன்

அதுமட்டுமின்றி நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், டெல்லி பப்ளிக் பள்ளியில் பயின்று வரும் 16 வயது மாணவர் ஒருவர் தான் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவரை விசாரித்த போது, விளையாட்டுத்தனமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024.., மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தாவிய குருபகவான்? இனி என்னெல்லாம் நடக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *