கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - தேடுதல் வேட்டையில் மாநகராட்சி ஊழியர்கள்!!கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - தேடுதல் வேட்டையில் மாநகராட்சி ஊழியர்கள்!!

கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய்: கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல பூங்காவில் 5 வயது சிறுமியை நாய் குதறிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  கேரள மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கிய சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒன்பது பேரை ஓடவிட்டு துரத்தி துரத்தி கடித்த அந்த தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதிக்கு அருகில் உள்ள ராதாபுரம் என்ற இடத்தில் இரண்டு முதியவர்களை கடித்து விட்டு அந்த தெரு நாய் ஓடியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய்

நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு – வழக்கு ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *