மஞ்சும்மல் பாய்ஸ் பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு - பண மோசடி செய்ததாக புகார்?மஞ்சும்மல் பாய்ஸ் பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு - பண மோசடி செய்ததாக புகார்?

மஞ்சும்மல் பாய்ஸ் பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது மஞ்சும்மல் பாய்ஸ் தான். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று குணா குகையில் சிக்கி கொண்ட நண்பனை காப்பாற்றிய உண்மை சம்பவத்தை வைத்து படம் எடுக்கப்பட்டதால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த சம்பவம் மலையாள சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு

அதாவது கேரளா அரூர் பகுதியை சேர்ந்த சிராஜ் இப்படத்தை தயாரிக்க 8 கோடி முதலீடு செய்ததாகவும், படத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவீதமும் தருவதாகவும்  தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி கூறியுள்ளார். ஆனால் இப்பொழுது வரை பணம் கொடுக்கவில்லை என்றும், ஏன் முதலீடு செய்த பணத்தை கூட கொடுக்க வில்லை என்று கூறி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,  தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த மனு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து  அவர்கள் மூன்று பேர் மீதும் மரடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கரணை ஆணவ படுகொலை விவகாரம் – தற்கொலை செய்து கொண்ட மனைவி – சிக்கிய முக்கிய கடிதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *