எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

எம்பி கணேசமூர்த்தி

ஈரோடு மாவட்டம் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக திகழ்ந்து வந்தவர் தான் கணேச மூர்த்தி. அதுமட்டுமின்றி அவர் மதிமுகவின் பொருளாளராகவும் செயலாற்றி வந்தார். இதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்கு திருச்சி மக்களவைத் தொகுதி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் கணேசமூர்த்தி சில நாட்களுக்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி தற்போது உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் அவருடைய இழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு அரசியல் பிரமுகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது மரணத்திற்கும், எம்பி சீட் வழங்காததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12ம் வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *