30 வயது இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்.., மோசமாக சித்திரவதை செய்த 4 பேர்., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!30 வயது இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்.., மோசமாக சித்திரவதை செய்த 4 பேர்., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

நிர்வாணமாக்கி ஊர்வலம்

மணிப்பூரில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி ஆண்கள் இழுத்து சென்ற கொடூரத்தின் சுவடுகள் கூட இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், ஓர் இளம் பெண்ணை நிர்வாணமாக்கி பெண்களே இழுத்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமீபத்தில் நாட்டில் பல இடங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சச்சோடா என்ற பகுதியில் 30 வயது பெண்ணை ஹோலி பண்டிகை என்ற பெயரில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறை அங்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் அவமானம் தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த கேவலமான செயலில் ஈடுபட அந்த நான்கு பெண்கள் மீது  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 452 (தவறாகத் தடுத்து நிறுத்துதல் மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MI Vs SRH: மிரட்டல் அடி அடித்த ஹைதராபாத்.., அபார சாதனையை படைத்த சம்பவம்.., மல்லுக்கட்டிய மும்பை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *