புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: இது தான் நடந்தது? தந்தை கண்ணீர் மல்க பேட்டி!!புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: இது தான் நடந்தது? தந்தை கண்ணீர் மல்க பேட்டி!!

புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஹேமச்சந்திரன் தந்தை தனது மகனின் இறப்புக்கான காரணத்தை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர், ” என்னுடைய மகன் உடல் எடையை குறைக்க யூடியூபில் தொடர்ந்து வீடியோக்களை பார்த்து வந்தார். அப்போது உடல் எடை குறைவு குறித்து மருத்துவர் பேசும் விளம்பரம்  youtube-ல் வந்தது.

அதாவது சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் தொடர்ந்து அடிக்கடி உடல் எடை குறைப்பது குறித்த வீடியோ போட்டு வந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் குறைக்கலாம் எனவும், அதனால் எந்த ஒரு விளைவும் ஏற்படாது என்றும் விளம்பரம் கொடுத்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்து தான் என்னுடைய பையன் அங்கு போக கட்டாயம் படுத்தியதால் தான், நாங்கள் அங்கு குடும்பத்துடன் சென்று மருத்துவரை அணுகி details கேட்டு கொண்டு, நான் யோசித்து பிறகு சொல்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.

ஆனால் மருத்துவர் தொடர்ந்து வாட்ஸப்பில் என் பையனிடம் அவர்கள் பேசி வந்துள்ளன. இதனால் சிகிச்சை செய்ய கட்டாயம் படுத்தியதால் தான் இந்த சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். எல்லா சோதனையும் எடுத்து முடிந்தது. ஆனால் பெரிய மருத்துவர்கள் யாரும் ஒப்புதல் தரவில்லை. அதை எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இதனால் ஆபரேஷன் செய்த கொஞ்ச நேரத்தில் எனது மகன் இறந்து விட்டார்.இந்த மருத்துவர் மீது முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று கூறியுள்ளார். 

T20 உலகக்கோப்பை 2024: கிரிக்கெட் தொடரில் இணைந்த ‘யுவராஜ் சிங்’ – ICC வெளியிட்ட அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *