நூறு கோடி வசூலித்த மாநாடு படத்தில் பர்ஸ்ட்  நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!நூறு கோடி வசூலித்த மாநாடு படத்தில் பர்ஸ்ட்  நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

நூறு கோடி வசூலித்த “மாநாடு” படத்தில் பர்ஸ்ட் நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா: தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கேரியரில் மாஸ்டர்  பீஸாக இருக்கும் திரைப்படம் தான் மாநாடு. லூப் கதையாக எடுத்த இந்த இந்த படத்தில் ஹீரோவாக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் 100 கோடி மேல் வசூல் செய்துள்ளது. இப்படி இருக்கையில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் முதலில் சிம்பு, SJ சூர்யா நடிக்க கமிட்டாகவில்லையாம். அட ஆமாங்க, மாநாடு படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது பசுபதி.

நூறு கோடி வசூலித்த மாநாடு படத்தில் பர்ஸ்ட்  நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா?

இதனை தொடர்ந்து படத்தின் கதை சற்று மாறியவுடன் அர்ஜுனை நடிக்க வைக்க திட்டமிட்ட போது, சில பிரச்சனை காரணமாக விலகியுள்ளார். இதனை தொடர்ந்து அரவிந்த் சாமி, கிச்சா சுதீப் , ரவி தேஜா உள்ளிட்ட பல நடிகர்களிடம் நடிக்க கேட்டுள்ளனர். ஏதோ காரணம் காட்டி தள்ளி போன நிலையில் இறுதியாக எஸ்.ஜே. சூர்யாவிடம் இந்த ரோல் வந்து சேர்ந்துள்ளது என சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் எஸ்.ஜே. சூர்யா நடித்தால் மட்டுமே அளவில் ஹிட் அடித்தது என்றே சொல்லலாம். மற்ற நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த அளவுக்கு ஹிட் அடித்திருக்குமா என்றால் தெரியவில்லை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *