பழம்பெரும் பாடகி உமா ரமணன் காலமானார் - சோகத்தில் மூழ்கிய இசை ரசிகர்கள்!!பழம்பெரும் பாடகி உமா ரமணன் காலமானார் - சோகத்தில் மூழ்கிய இசை ரசிகர்கள்!!

பழம்பெரும் பாடகி உமா ரமணன் காலமானார்: தமிழ் திரைத்துறையில் 80ஸ் காலகட்டத்தில் இருந்து பின்னணி பாடகியாக இருந்து வந்தவர் தான்  உமா ரமணன். தமிழில் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இளையராஜா, தேவா, எம் எஸ் விஸ்வநாதன், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பயணித்துள்ளார்.

பழம்பெரும் பாடகி உமா ரமணன் காலமானார்

இவர் கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு என்ற பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் இறப்புக்கு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி உமா ரமணன் இறுதிச் சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா – காரணம் இது தானா? வெளிவந்த பகீர் பின்னணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *