தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருவதால் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான  சென்னை, ராணிப்பேட்டை, நெல்லை, கன்னியாகுமரி ,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்பொழுது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. வட சென்னையில் உள்ள  கொருக்குப்பேட்டை, பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது மழை பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *